இசைக்குயில் கில்மிஷாவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் நேரில் சென்று வாழ்த்தி – பாராட்டியுள்ளார்.
தன் இசையால் உலகத்தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம் பாடகியாக உருப்பெற்று, ஈழத்தமிழர்களின் அடையாளமாய் இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப இசைநிகழ்வில் வெற்றியாளராக முடிசூடி, நேற்று நாடு திரும்பினார் கிலஷ்மிசா.
இந்நிலையில் கில்மிஷாவை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று, நேரில்சென்று வாழ்த்தி மதிப்பளித்தார்.










