தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரப் பகுதியில் 91 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 12 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை, ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 2 ஆயிரத்து 923 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
483 வாகனங்கும் கைப்பற்றப்பட்டுள்ளன.