நவம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகள் மீள திறக்கப்படும்- கல்வி அமைச்சர்

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நவம்பர் 23 ஆம் திகதி மீள திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று தெரிவித்தார்.

பாடசாலைகளை இன்று (9) மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே மேலும் இரு வாரங்களுக்கு விடுமுறையை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கல்வி அமைச்சர் கூறினார்.

Related Articles

Latest Articles