அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனறாகலை பகுதியில் பதுங்கி இருந்த நிலையிலேயே அவர் நேற்றிரவு சிக்கியுள்ளார்.
அக்குரேகொட பகுதியில் கடந்த 13 ஆம் திகதி சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இரு துப்பாக்கிதாரிகளே சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பின்சென்றனர்.
இது தொடர்பான விசாரணை வேட்டையில் கடந்த 21 ஆம் திகதி துப்பாக்கிதாரியொருவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார்.
இந்நிலையிலேயே இரண்டாவது துப்பாக்கதாரியும் நேற்றிரவு கைது மேல் மாகாண தெற்கு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு 29 வயதென தெரியவந்துள்ளது.
தெற்கில் இடம்பெற்ற சில துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் இவர் தேடப்பட்டுவந்த நபரென தெரியவருகின்றது.
மொனறாகலையில் அவர் தங்கி இருந்த வீட்டில் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனறாகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகலொன்றுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.
மேற்படி இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
