ICC ஆண்கள் T20 உலகக்கிண்ணம் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் (20) நிறைவுபெறுகின்றன. தொடரின் கடைசி லீக் ஆட்டமாக பலம்பொருந்திய ஆஸ்திரேலியா அணியும், புதுமுக அணியான ஓமான் அணியும் மோதவுள்ளன.
இந்தப் போட்டி கண்டி நகரில் அமைந்துள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த உலகக்கிண்ண தொடரில் முன்னணி அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட ஆஸ்திரேலியா அணி, எதிர்பாராத தோல்விகளால் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.
இது அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொடரின் கடைசி போட்டியில் வெற்றியைப் பதிவு செய்து ஆறுதல் பெறுவதற்கும், தங்களது திறமையை நிரூபிப்பதற்கும் ஆஸ்திரேலியா அணி தீவிர முயற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தொடரின் அடுத்த கட்டமான சூப்பர் 8 சுற்று நாளை (21) முதல் ஆரம்பமாகிறது. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வலுவான பாகிஸ்தான் அணியும், சமநிலை திறன் கொண்ட நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன.
இந்த சூப்பர் 8 சுற்று போட்டிகள், உலகக்கிண்ணத்தின் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கும் முக்கியமான போட்டிகளாக அமையவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
