போதைப்பொருள் கடத்தல்காரரான மட்டக்குளிய “குடு ரொசான்” என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.