பிரிட்டன் துணை பிரதமர் – தமிழ்த் தேசிய தலைவர்கள் சந்திப்பு!

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவரின் இல்லத்தில், நேற்று பிற்பகல் 2:30 மணி முதல் சுமார் 45 நிமிட நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஆகியோரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles