“ உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு இன நல்லிணக்கம் மிக முக்கியம். இது விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது.” – என்று பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழாவுக்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
“ உண்மையான சுதந்திரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நிலையான சமாதானம் அவசியம். இதற்கு இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் மிக முக்கியம். எமது அரசாங்கம் இது விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகின்றது.
மீண்டும் இனவாத மோதல் ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது. தேசிய சமத்துவம் கட்டியெழுப்படும். உண்மையான சுதந்திரம் நிலைநிறுத்தப்படும்.
சிறப்பானதொரு நாட்டை உருவாக்கவும், வளமானதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.” – என்றார்.
