பி#ரபாகர#ன் படையினரிடம் சரணடைய வேண்டும் என மஹிந்த ராஜபக்ச போர் காலத்தில் கூறி இருந்தார். எனவே, பொன்சேகா கூறுவது புதிய விடயம் அல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
பொன்சேகா வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச கூறியவை வருமாறு,
“பி#ரபாகர#னுக்கு துப்பாக்கியை வைத்துவிட்டு இராணுவத்திடம் சரணடைய வேண்டியது மட்டுமே எஞ்சியுள்ளது என்பதை போர் நடக்கும் காலப்பகுதியிலேயே மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
எனவே, பொன்சேகா வெளியிட்ட கருத்து அவருக்கு வேண்டுமானால் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். அது புதிய விடயம் அல்ல.
வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு ஒரு புறத்தில் பொன்சேகா குறிப்பிடுகின்றார். மறுபுறத்தில் தப்பிச்செல்ல வழி சமைத்தார் எனக் கூறுகின்றார்.
நாம் தமிழர்களுக்கு எதிராக போர் செய்யவில்லை. பு#லி பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே போரிட்டோம்.
குறைந்தளவு சேதங்கள், குறைந்தளவான உயிரிழப்புகளுடன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே மஹிந்த ராஜபக்கவின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்தார்.
டயஸ்போராக்கள் மற்றும் தற்போதைய அரசாங்கம் கூறுவதுபோல மஹிந்த ராஜபக்ச கொ#லையாளி அல்ல என்பதை பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி.” – என்றார்.
