ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoHomeGota பிரச்சாரம் சமூகவலைத்தளங்களில் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆளுங்கட்சியனரால் #WeAreWithGota பரப்புரை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அமைச்சர்களும், அரச திணைக்களங்களில் பதவிகளை வகித்து வருபவர்களும், தமது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள கணக்குகளில் எனும் பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகின்றனர்.
அதேவேளை, இந்த அரசை வீட்டுக்கு செல்லுமாறு வலியுறுத்தி கொழும்பில் நாளை பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.










