சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிரிவின் பணிப்பாளர் கிருஷ்ணா சிறிநிவாசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தப் பயணம் சர்வதேச நாணய நிதியத்தின், இலங்கை தொடர்பான திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின், குழுவினர், அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
