எல்பிட்டிய, பத்திராஜ வத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் பதவியை வகித்த ரொஷான் குமார (51) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.










