ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் , பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் இன்று (20) நடைபெறவுள்ளது.
புதுடெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பிரதமர் மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்றுள்ளார்.
இதற்கு இணையாகவே மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளார, பாதுகாப்பு மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
மேற்படி சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி நாடு திரும்புவார்.
