ஐக்கிய மக்கள் சக்தி மாநாட்டுக்கு முன் ரணில் – சஜித் நேரடி சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு விரைவில் இடம்பெறவுள்ளது உறுதியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி உதயமாகி எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் ஆறாண்டுகள் ஆகின்றன.

அதற்கு முன்னதாக இருவரும் நேரடி சந்திப்பில் ஈடுபடுவார்கள் என தெரியவருகின்றது.

இதன்போது எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனவும் அறியமுடிகின்றது.

இரு கட்சிகளும் இணைவுக்கு இணங்கி இருந்தாலும் தனிக்கட்சியா, கூட்டணியா என்பது பற்றி இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை.

எனவே, ரணில் மற்றும் சஜித்துக்கிடையிலான சந்திப்பே அடுத்தக்கட்டத்தை நிர்ணயிக்கும் என கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles