இன்றைய தேர்தல் காலத்தில் தமிழ்த் லைமைகள் வெற்றியை மாத்திரம் நோக்காக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாகப் பிரிப்பதற்கு துணை சென்று அதனை இரண்டாகப் பிரித்து தங்களின் வெற்றி வாய்ப்புக்காக சஜித் பிரேமதாசாவின் செல்வாக்கை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற முனைப்போடு இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி எனும் கட்சியில் டெலிபோன் சின்னத்தில் இணைந்து வாக்கு கேட்கின்றனர்.
சஜித் நாட்டை தலைமைத்தாங்கக் கூடியவர் அல்ல என்பதை கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிரூபித்துவிட்டது என களுத்துறை மாவட்ட ஐ.தே.க வேட்பாளர் சண்.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
” கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்விக்குப் பின்னர் சஜித் பிரேமதாச நடத்திய முதலாவது பத்திரிகை மாநாட்டிலும் அவர் நடந்து கொண்ட விதத்திலும் அவர் எந்த விதத்திலும் இலங்கையை தலைமைத்தாங்கக் கூடியவர் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்.
அதேவேளை 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு பிரவேசித்த அவர் 2010 ஆண்டு கட்சித்தலைமையை கோரி அடம்பிடிக்கும் சிறுபிள்ளையாகவே இருந்து வந்திருக்கின்றார்.
அவரை விட கட்சியில் அனுபவம் நிறைந்த மூத்த உறுப்பினர்கள் இருக்கும் போது தன்னுடைய கட்சி தலைமைப்பதவிதான் தன்னுடைய இலக்கு போல அந்த கட்சித் தலைமைப்தவிக்கான ஆசை கொண்டு தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
தேர்தலில் வெற்றி கொள்ள முடியாதவர்கள் இன்று ஐ.தே.விலிருந்து பிரிந்து சென்றவர்கள், தான் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வந்து விட முடியாது என்பதால் பெரும் இனவாதியான சம்பிக்க இன்று சிறுபான்மை இன தலைமைகளை வழி நடத்தும் தலைவராக மாறியிருக்கின்றார். ஒரு இனவாதியின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த்தலைமைகள் அகப்பட்டுக்கொள்ளக்கூடாது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாஸா வெளி உலகுக்கு தெரிகின்ற போதிலும் அதனுடைய நிழல் தலைவர்களாக அல்லது அதனை வழி நடத்துபவர்களாக சிறுபான்மை தமிழ்த்தலைவர்களுக்கு அறிவுரை கூறி அழைத்துச் செல்பவராக சம்பிக்க ரணவக்க இருக்கின்றார்.
சம்பிக்க அன்று ஆரம்பித்து வைத்த இனவாத பயணம் இலங்கையில் இன்றும் இருந்துக்கொண்டே இருக்கின்றது. அவர் அன்று சிஹல உறுமய என கட்சியை ஆரம்பித்து தன்னுடைய அரசியலுக்காக இனவாதத்தை தூண்டிவிட்டு பௌத்த மதகுருக்களை அரசியலில் ஈடுபடுத்தி தன்னுடைய சுயநலத்துக்காக இனவாதத்தையும் மத வாதத்தையும் இந்நாட்டில் வளர்த்தார்.
2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க சமாதான ஒப்பந்தத்தை எடுத்து எவ்வித உயிரிழப்புக்களும் இன்றி இனப்பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக்கொள்வதற்கான முன்னெடுப்பை செய்தபோது அதற்கு சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் தடையாகவே இருந்தனர். இவ்வாறானவரின் பிடிக்குள்ளேயே இன்று சிறுபான்மை தலைவர்கள் அகப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு ஐ.தே.க வின் மூலமே பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமே புதியதொரு பாராளுமனற்த்தை உருவாக் க முடியும்.
ஆகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வந்த ஆதரவை இம்முறையும் வழங்கி பொதுத்தேர்தலில் ஐ.தே.க விற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.