சூப்பர்-8 சுற்றுக்கான அணிகள் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அணிகளின் தற்போதைய நிலை மற்றும் அடுத்த கட்டத்திற்கான தயாரிப்பை மதிப்பீடு செய்ய இன்றைய போட்டி பலப்பரீட்சையாக அமையும்.
இந்தப் போட்டி Colombo (RPS) சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகும்.
அதேவேளை, 37-ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதவுள்ளன.
இப்போட்டி இந்தியாவின் கொல்கத்தாவில் அமைந்துள்ள Eden Gardens மைதானத்தில் முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே சூப்பர்-8 சுற்றுக்குள் தகுதி பெற்றுள்ளதால், இப்போட்டியின் முடிவு அடுத்த கட்ட முன்னேற்றத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இருப்பினும், அணியின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வாய்ப்பாக இது கருதப்படுகிறது.
அதேவேளை, 39-ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் கனடா அணிகள் மோதவுள்ளன.
