மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் இன்று!

மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு இன்று 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு தலவாக்கலை, டெவன் தோட்டத்திலுள்ள சிவனு லெச்சுமணனின் நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெறும்.

அதன்பின்னர் பிற்பகல் 4 மணிக்கு வட்டகொடை மணிப்பூர் சிறுவர் நிலைய முன்றலில் நினைவுரைகள் இடம்பெறவுள்ளன.

Related Articles

Latest Articles