ICC T20 உலகக்கிண்ண தொடரில் இன்று (18) மூன்று முக்கிய லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
36 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது.
இந்திய அணி ஏற்கனவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சூப்பர் 8 சுற்றுக்குள் தகுதி பெற்றுள்ளதால், இன்றைய போட்டியின் வெற்றி அல்லது தோல்வி அடுத்த சுற்று தகுதியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
எனினும், அணியின் தொடர்ச்சியான வெற்றிப் பயணத்தை நிலைநிறுத்த இந்திய அணி உறுதியுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, டெல்லியில் இன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் 34 ஆவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென் ஆபிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகக் கருதப்படுவதுடன், குறிப்பாக தென் ஆபிரிக்கா அணி தங்களது முன்னிலை நிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் விளையாட உள்ளது.
அதேபோல், கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் 25 ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி பாகிஸ்தான் அணிக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைவதற்காக பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், இன்றைய போட்டிகள் ரசிகர்களுக்கு பரபரப்பான மற்றும் தீர்மானிக்கும் போட்டிகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
