இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று டாக்காவில் நடைபெறவுள்ளது.
முதல் இரு போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளன.
குசல் பெரேரா இலங்கை அணியின் தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் தலைமை தாங்கிய முதல் தொடர் இதுவாகும்.
எனவே, முதல் இரு போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து, இலங்கை ஆறுதல் வெற்றியையாவ பதிவு செய்யவேண்டும் என்பதே இலங்கை இரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.