இது மொட்டு கட்சி அரசா? பஸிலுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்

இது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆட்சிதானா என்ற சந்தேகம் எமக்கும் உள்ளது. பசுவின் முன்பகுதி மட்டுமே எங்கள் வசம் உள்ளது. பின்பகுதி வேறு இடத்தில்தான் உள்ளது – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களை ஒத்திவைக்க இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தேர்தலை பிற்போடுவதற்கு நாம் எதிர்ப்பு. ஜனாதிபதி, பொதுத்தேர்தல் என்பன உறுதி காலப்பகுதிக்குள் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றோம். அதற்காக முன்னிலையாவோம். தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எமக்கும் உள்ளது. ஆனால் அது நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இது ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் ஆட்சி என பலர் கூறினாலும் எமது கட்சியில் உள்ள சிலரே அமைச்சரவையில் உள்ளனர். இது எங்கள் ஆட்சி என பலர் கருதினாலும் பசுவின் முன்பக்கம் மட்டும்தான் எமக்கு, பின்பகுதி மற்றைய தரப்பிடம். இது எமது அரசா என்று எமக்கும் சிலவேளைகளில் சந்தேகம் ஏற்படுகின்றது. வடகிழக்கு, ஊவா, கிழக்கு உட்பட ஐந்து மாகாணங்களில் எமக்கு அமைச்சர் ஒருவர் இல்லை. எனவே, இது எப்படி எமது அரசு எனக் கூறமுடியும்?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஏனெனில் ஜனாதிபதி தேர்தலை நடத்திவிட்டு பொதுத்தேர்தலுக்கு சென்றால் வெற்றிபெற்ற கட்சிக்கே வாய்ப்பு அதிகம், அதன்மூலம் மக்களின் உண்மையான பிரதிபலன் தென்படாது.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles