இந்திய தூதுவர், ஜீவன் அவசர சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும், இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்தார்.

அத்துடன், பேரிடரால் பெருந்தோட்டப்பகுதிகள் உட்பட மலையகத்தில் ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் இந்திய தூதுவருக்கு ஜீவன் தொண்டமான் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேவேளை, இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என ஜீவன் தொண்டமானிடம் இந்திய தூதுவர் உறுதியளித்துள்ளார்.

Related Articles

Latest Articles