இலங்கையின் நெருக்கடி பற்றி MAS Holdings விடுக்கும் அறிக்கை

2002 ஏப்ரல் 20ஆம் திகதி, கொழும்பு

அமைதி வழி ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுவதற்கும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கும் இலங்கைப் பிரஜைகள் கொண்டுள்ள உரிமைகளை ஆதரிக்கும் விதத்தில், MAS ஆனது கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி அறிக்கையொன்றை விடுத்தது.

அதன் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்களுக்கு மத்தியில், சமகால சமூக, பொருளாதார நெருக்கடியை அமைதியாகவும், நிலைபேறான வகையிலும் தீர்ப்பதற்கு துரிதமானதும், தீர்க்கமானதுமான நடவடிக்கையின் அவசியத்தை MAS மீள வலியுறுத்துகிறது. ஒரு பொறுப்புள்ள ஸ்தாபனம் என்ற ரீதியில், மாற்றத்திற்கும், நல்லாட்சிக்காகவும் விடுக்கப்படும் அழைப்பை நிபந்தனையின்றி ஆதரிப்பதோடு, சட்டத்தையும், அரசியல் யாப்பிற்கு உட்பட்ட நடைமுறைகளையும் மதிப்பதுடன், மக்களின் குரலுக்கு கண்ணியம் கொடுத்து, அதற்கமைய நடவடிக்கை எடுக்குமாறு தேசத்தின் தலைவர்களிடம் அக்கறையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையின் தனியார்த்துறையில் ஆகக்கூடுதலானவர்களை வேலைக்கு அமர்த்திய, ஆகக்கூடுதலாக ஏற்றமதி செய்யும் நிறுவனமென்ற ரீதியில், நாட்டின் பொருளாதார ஸ்திரநிலையைப் பேணுவதில் எமக்குள்ள வகிபாகத்தையும் MAS நுண்மையாக புரிந்து கொண்டுள்ளது. இந்த விடயத்தில், எமது வாடிக்கையாளர்களுக்கான கடப்பாடுகளை தங்குதடையின்றி நிறைவேற்றி, எமது சகாக்கள் 92,000 பேரினதும், அவர்களது குடும்பத்தவர்களதும், நாட்டினதும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதன் மீது கவனம் செலுத்துவது முக்கியமானது.

எமது வரலாற்றின் மிகவும் கொந்தளிப்பான, முக்கியமான தருணங்களில், ஆடையுற்பத்தித் துறையானது இலங்கைப் பொருளாதாரத்திற்கு உயிரூட்டுவதாகத் திகழ்ந்துள்ளது. நாம் ஒன்றாக இருந்து, இந்த நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்து, எமது நாட்டை மென்மேலும் சிறப்பானதாகக் கட்டியெழுப்பக் கூடிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எமக்குத் தொடர்ந்தும் உண்டு. எப்போதும் போல, இந்தக் கடினமான சந்தர்ப்பத்தில், நெருக்கடியின் மூலம் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் கூடிய சமூக நலத் திட்டங்கள் ஊடாக எமது சமூகங்களுக்கு MAS குழுமம் உதவி செய்து வருகிறது.

திடமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு சகல இலங்கையர்களையும் வாழ்த்துகிறோம்.

மாற்றம் என்பது ஊக்கமாகும்.
இப்படிக்கு
MAS Holdings

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles