இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார்.

கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம் இந்த ஆண்​டுடன் 50 ஆண்​டு​களை நிறைவு செய்​கிறது.

லண்​டனில் சிம்​பொனி இசை நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்​துள்​ளார். அவரது சாதனை​களை பாராட்​டி, அவரை கவுரவிக்​கும் வகை​யில் தமிழக அரசு சார்​பில் ‘சிம்​பொனி சிகரம் தொட்ட தமிழன் இசை​ஞானி இளை​ய​ராஜா​வின் பொன்​விழா ஆண்​டு-50 பாராட்டு விழா’ சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் நேற்று நடந்​தது. விழா​வில், இளை​ய​ராஜாவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நினை​வுப் பரிசு வழங்​கி​னார்.

விழா​வில் தலைமை உரை நிகழ்த்தி முதல்​வர் பேசி​ய​தாவது: ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா. நேற்று இல்லை நாளை இல்லை எப்​ப​வும் நீ ராஜா. இசை எனும் தேனை உலகத்​துக்கே தரும் இந்த தேனிக்​காரரை பாராட்ட இங்கு கூடி​யிருக்​கிறோம். அவர் கலைத்​தாய்க்கு மட்​டுமின்​றி, தமிழ்த்​தாய்க்​கும் சொந்​த​மானவர். அதனால்​தான், தமிழக அரசு சார்​பில் பாராட்டு விழா நடத்​தப்​படு​கிறது.

பண்​ணைபுரத்​தில் இருந்து புறப்​பட்ட இந்த மனிதர், திறமை​யும், உழைப்​பும் இருந்​தால், எப்​பேர்ப்​பட்ட உயரங்​களை​யும் அடைய​லாம் என்​று, அனைத்து மனிதர்​களுக்​கும் எடுத்​துக்​காட்​டாக திகழ்​கிறார். இவர் மொழிகள், நாடு​கள், எல்​லைகளைக் கடந்த ராஜா.

அனைத்து மக்​களுக்​கு​மானவர். இளை​ய​ராஜாவை பற்​றி, வலை​தளத்​தில் ஒரு​வர் எழு​திய சில வரி​களை சொல்ல விரும்​பு​கிறேன். இளை​ய​ராஜா மட்​டும் இசையமைத்​திருந்​தால் திருக்​குறளும் – நற்​றிணை​யும் – புற​நானூறும் – குறுந்​தொகை​யும் – ஐங்​குறுநூறும் – பதிற்​றுப்​பத்​தும் – பரி​பாடலும் – சிலப்​ப​தி​கார​மும் – எங்​களுக்கு மனப்​பாடம் ஆகி​யிருக்​கும் என்று எழு​தி​யிருந்​தார். நானும் இதையே​தான் தமிழ் ஆர்​வல​ராக உங்​களிடம் கோரிக்​கை​யாக வைக்​கிறேன். சங்​கத்​தமிழுக்​கு, தமிழ் இலக்​கி​யங்​களுக்கு நீங்​கள் இசையமைத்து சில ஆல்​பங்​களை வெளி​யிட​வேண்​டும்.

இசை​யால், நம் நெஞ்​சங்​களை ஆளும் இளை​ய​ராஜாவுக்​கு, எத்​தனையோ புகழ் மகுடங்​கள், பாராட்டு மாலைகள், பத்​மபூஷண், பத்​ம​விபூஷண் போன்ற பட்​டங்​கள் இருந்​தா​லும், முன்​னாள் முதல்​வர் கருணாநிதி வழங்​கிய ‘இசை​ஞானி’ பட்​டம் அவரது பெய​ராகவே நிலைத்​து​விட்​டது.

இளை​ய​ராஜா பெயரில் விருது:

இசைத்​துறை​யில், ஆர்​வத்​துடன் சிறந்த இசையைப் படைக்​கும் இசைக்​கலைஞர்​களை ஊக்​குவிக்​கும் வித​மாக தமிழக அரசின் சார்​பில், இனி ஆண்​டு​தோறும் ‘இசை​ஞானி இளை​ய​ராஜா’ பெயரில் விருது வழங்​கப்​படும். இசைத் துறை​யில் பல சாதனை​கள் படைத்த, பல சிகரங்​களை தொட்ட இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு இந்​தி​யா​வின் உயரிய விரு​தான ‘பாரத ரத்​னா’விருது வழங்​கப்பட வேண்​டும் என்ற ஆவலை, உலகம் முழு​வதும் உள்ள அவரது ரசிகர்​களின் சார்​பில் தெரிவிக்க விரும்​பு​கிறேன்.

இது நிச்​ச​யம் நிறைவேறும் என்று நம்​பு​கிறேன். உங்​கள் பயணம் இன்​னும் பல்​லாண்​டு​காலம் தொடர வேண்​டும் என்று தமிழ் மக்​களின் சார்​பில் வாழ்த்​துகிறேன். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

விழா​வில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வரவேற்​புரை ஆற்​றி​னார். நடிகர்​கள் ரஜினி​காந்த், கமல்​ஹாசன் ஆகியோர் வாழ்த்​துரை வழங்​கினர். நிறை​வாக, இளை​ய​ராஜா ஏற்​புரை நிகழ்த்​தி​னார்.

துரை​முரு​கன், கே.என்​.நேரு, மு.பெ.​சாமி​நாதன் உள்​ளிட்ட அமைச்​சர்​கள், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், நாடாளு​மன்ற, சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள், நடிகர்​கள், நடிகைகள், இசையமைப்​பாளர்​கள் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். தொடக்​க​மாக, இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் முதல்​வர்​ மு.க.ஸ்​டா​லின்​ விருப்பம் தெரிவித்த பாடல்கள் பாடப்பட்டன. தொடர்ந்து இளை​ய​ராஜா​வின் சிம்​பொனி இசை நிகழ்ச்சி நடந்​தது.

Related Articles

Latest Articles