உண்மையை மறைப்பதுகூட குற்றமே – மைத்திரிக்கு மஹிந்த உபதேசம்!

“ நீதிமன்றம் அழைப்புவிடுக்கும்வரை காத்துக் கொண்டிருக்காமல் தெரிந்த உண்மையை மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை மறைப்பதும் ஒருவகையில் குற்றமாகும்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் உண்மைச் சூத்திர தாரியைத் தாம் அறிந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். உங்களின் நிலைப்பாடு என்ன ?

பதில்: அவரது கருத்து பாரதூரமானது. குண்டுத்தாக்குதல் தொடர்பில் அவருக்கு ஏதும் தெரிந்திருந்தால் அதனை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும். நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மை தெரிந்திருந்தும் அதனை மறைப்பதும் குற்றமாகக் கருதப்படும்.

கேள்வி: பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?
பதில்: அவசரபப்ட வேண்டியதில்லை. உரிய நேரத்தில் எமது தீர்மானத்தை அறிவிப்போம்.

கேள்வி: ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினைக்குரியதாக உள்ளதாலா பொதுத்தேர்தலைக் கேட்கின்றீர்கள் ?

பதில்: அவ்வாறில்லை. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சிதான் பொதுத்தேர்தலிலும் வெற்றி பெறும். சகல தரப்புக்கும் சம அந்தஸ்து கிடைக்கப்பெற வேண்டுமாயின் பொதுத்தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும்.

கேள்வி: கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுண வர்தன நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புகள் வெளிப்பட் டுள்ளனவே?

பதில்: ரோஹித்த அபேகுணவர்தன மக்கள் பிரதிநிதி. ஆகவே அவர் கோப் குழுவின் தலைவராக நியமிக்கப்பட் டுள்ளார். வெளிநபரைத் தலைவராக நியமிக்கவில்லை.

கேள்வி: இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசியத் தேர்தல் கள் சவால்மிக்கதே?

பதில்: ஆம். இந்தச் சவால்களைக் காட்டிலும் பாரிய சவால்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். தற்போதைய சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிக் கொள்வோம் – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles