உள்ளாட்சிசபைத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறமாட்டாது.
தேர்தல் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது.
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னரே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மார்ச் 9 ஆம் திகதி உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்தது.
எனினும், நிதி கிடைக்காததால் தேர்தல் பிற்போடப்பட்டது.
பின்னர் ஏப்ரல் 25 தேர்தல் நடத்தப்படும் எனக் கூறப்பட்டது. அந்த நாளும் தற்போது பிற்போடப்பட்டுள்ளது.
