முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாவதற்கு கால அவகாசம் கோரியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் “சிரிலிய” எனும் பெயரில் நடத்திசெல்லப்பட்ட வங்கி கணக்கில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே ஷிராந்தி ராஜபக்ச இன்று FCID க்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், தனிப்பட்ட காரணங்களால் தன்னால் இன்று முன்னிலையாக முடியாது என இற்கு ஷிராந்தி ராஜபக்ச தெரியப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இரு வாரங்கள் கால அவகாசமும் கோரியுள்ளார்.
