எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது பஸ் மோதி விபத்து!

மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் வரையில் காயமடைந்துள்ளதுடன், 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திற்கு முன்னால், இன்று (27) காலை வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது வீதியில் பயணித்த தனியார் பஸ் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

செங்கலடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles