ஐ.எம்.எப். குழு நாளை இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நாளை (20) திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே இக் குழுஇலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

அவர்கள் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles