திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு 8.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இந்தக் கத்திக்குத்து தாக்குதலினால் உயிரிழந்தவர் சேருநுவர கல்வல சந்தியில் வசித்து வந்த எம்.ஜீ. சஞ்சீவ கருணாரத்ன (41வயது) எனவும் தெரிய வருகின்றது.
அனுராதபுரம் கண்னேவ பகுதியில் வசித்து வந்த சம்பிகா குமாரி என்பவர் திருமணம் கணவரை விட்டு பிரிந்து சேருநுவர பகுதியில் மற்றுமொரு நபருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் முதலாவது கணவர் மனைவியை தேடி வந்து, மனைவியுடன் வாழ்ந்து வந்த குறித்த நபரைக் கத்தியால் குத்தினார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. விசாரணைகளை சேர நுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.