கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சிறைச்சாலைகளில் இட நெருக்கடி

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 13,241 கைதிகளையே தடுத்து வைப்பதற்கான இடவசதி உள்ளது.

எனினும், தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 29,000-ஐ அண்மித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது 200% அதிகரிப்பாகும்.

Related Articles

Latest Articles