கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையின்போதே கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயர்குருதி அழுத்தத்தாலேயே இம்மரணம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களிக் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles