இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையின்போதே கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயர்குருதி அழுத்தத்தாலேயே இம்மரணம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களிக் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.