கொல்கத்தாவை பந்தாடி முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை பந்தாடி மும்பை அணி முதலாவது வெற்றியை நேற்று பதிவு செய்தது.

8 அணிகள் பங்கேற்றுள்ள 13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அபுதாபியில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சுடன் மோதியது.

‘டாஸ்’ வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் மும்பையை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் குயின்டான் டி காக் (1 ரன்) ஷிவம் மாவியின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் கேப்டன் ரோகித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் ஜோடி சேர்ந்து, எதிரணியின் பந்து வீச்சை பின்னியெடுத்தனர். சந்தீப் வாரியரின் ஓவரில் சூர்யகுமார் 4 பவுண்டரி சாத்தினார். வேகப்பந்து வீச்சாளர் கம்மின்சின் ஓவரில் இரு பிரமாதமான சிக்சர்களை பறக்க விட்டு ரோகித் சர்மாவும் ரன்வேட்டையை துரிதப்படுத்தினார். இதனால் அவர்களின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அணியின் ஸ்கோர் 98 ரன்களாக உயர்ந்த போது சூர்யகுமார் யாதவ் (47 ரன், 28 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த சவுரப் திவாரி 21 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் 37-வது அரைசதத்தை கடந்து தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய ரோகித் சர்மா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 80 ரன்களில் (54 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

ஷிவம் மாவி புல்டாசாக வீசிய பந்தை தூக்கியடித்த போது சிக்கினார். பின்னர் ஹர்திக் பாண்ட்யா (18 ரன்), பொல்லார்ட் (13 ரன், நாட்-அவுட்) ஆகியோரின் கடைசிகட்ட பங்களிப்புடன் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் ஷிவம் மாவி 2 விக்கெட்டும், சுனில் நரின், ரஸ்செல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஏலத்தில் ரூ.15½ கோடிக்கு வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 3 ஓவர்களில் 49 ரன்களை அள்ளி கொடுத்தாரே தவிர ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.

அடுத்து 196 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, பும்ரா, டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் உள்ளிட்ட மும்பை பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அபாயகரமான பேட்ஸ்மேன்களான ஆந்த்ரே ரஸ்செல் (11 ரன்), மோர்கன் (16 ரன்) ஜொலிக்கவில்லை. அதிகபட்சமாக கம்மின்ஸ் 4 சிக்சருடன் 33 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 30 ரன்களும் எடுத்தனர்.

கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 146 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் சென்னை அணியிடம் தோற்று இருந்தது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles