கொழும்பிலிருந்து பதுளைக்கு கம்பி மற்றும் இரும்பு வகைகளை ஏற்றிவந்துவந்த லொறியொன்று, பண்டாரவளை,குலத்தனை பகுதியில் இன்று (10) முற்பகல் 11 மணியளவில் விபத்துக்குள்ளானது.
விபத்தில் லொறி சாரதி லொறியில் நசிங்குண்ட நிலையில் மீட்கப்பட்டு, தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிரசிகிச்சைக்குற்படுத்தப்பட்டுள்ளார்.
பண்டாரவளைப் பொலிஸார் இவ் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். சாரதியின் நித்திரைகலக்கமே, இவ் விபத்திற்குகாரணமென்று தெரியவந்துள்ளது.
எம். செல்வராஜா, பதுளை