கொழும்பில் என்.பி.பி. ஆட்சி உறுதியானது!

கொழும்பு மாநகரசபையில் நாம் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டோம். இது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாத்திரமே வெளியிடவேண்டியுள்ளது.” – என்று அமைச்சர் லால்காந்த தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபையில் எதிரணியே ஆட்சியமைக்கும் எனக் கூறப்பட்டுவரும் நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை நேற்று விடுத்துள்ளார்.

” கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெறும்பான்மை பலத்தை உறுதிப்படுத்திவிட்டோம். அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டிய வேலை மட்டும்தான் உள்ளது. எமது மேயரும் பதவியேற்ற தயாராக உள்ளார்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles