கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் யாசகம் பெறுபவர்கள் நாளாந்தம் 7 ஆயிரம் ரூபாவரை வருமானம் பெறுகின்றனர் என தெரியவந்துள்ளது.
காலை முதல் மாலைவரை யாசகம் பெறும் இவர்கள், இரவில் சுகபோக வாழ்க்கை வாழ்வதாகவும், நட்சத்திர தரத்திலான ஹோட்டல்களில்கூட உணவு உண்கின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.
பிரதான வர்த்தக நிலையங்களுக்கு தேவையான இருபது ரூபா, ஐம்பது ரூபா, 100 ரூபா போன்ற நாணயத்தாள்களை யாசகர்களே வழங்கிவருகின்றனர் எனவும், யாசகத்தை பிரதான தொழிலாக கொண்டு செயற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் குறிப்பிடுகின்றனர்.