கோழிகளை நரியிடம் ஒப்படைப்பதா? கப்ராலின் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு!

சுயாதீன நிறுவனமாக இயங்கவேண்டிய மத்திய வங்கியையும் இந்த அரசு அரசியல் மயப்படுத்திவிட்டது. எனவே, மத்திய வங்கி அறிக்கைமீது இனிமேல் நம்பகத்தன்மையற்ற நிலைமையே ஏற்படும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மத்திய வங்கியென்பது சுயாதீனமாக இயங்கவேண்டிய மிக முக்கிய நிறுவனமாகும். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எனவேதான் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு சுயாதீனமாக இயங்கக்கூடிய துறைசார் நிபுணர்கள் நியமிக்கப்படுகின்றனர். அப்போதுதான் மத்திய வங்கியால் வழங்கப்படும் தகவல்கள்மீது நம்பிக்கை ஏற்படும்.

ஆனால் இன்று என்ன நடக்கின்றது? கட்சி அரசியலை முன்னெடுத்தவர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார். இதனால் இனிவரும் காலங்களில் மத்திய வங்கி அறிக்கைகூட, அரசியல் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமாக மாறக்கூடும். தகவல்களில் நம்பகத்தன்மை இருக்காது. இதனால் நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து அடையும் அபாயம் உள்ளது.

மத்திய வங்கிக்கு அரசியல் நியமனம் வேண்டாம் எனக்கூறவில்லை. ஆனால் திறமையான பலர் உள்ளனர். இந்நிலையில் ஆளுநர் ஒருவரை நியமிப்பதற்கான நெறிமுறைகளைமீறி கப்ரால் நியமிக்கப்படுவது ஏன்? ” – என்றார். அதேவேளை, மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமையானது, கோழிகளை நரியிடம் ஒப்படைத்த செயலுக்கு நிகரானதாகும் என்று ஜே.வி.பி. உறுப்பினர் சுனில் ஹத்துனெத்தில் குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles