இயக்குநர் ராம்கோபால் வர்மா அடுத்ததாக சசிகலா எனும் பெயரில் திரைப்படத்தை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
தனது டுவிட்டர் பக்கத்தில், மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் வர்மா,
“சசிகலா என்கிற திரைப்படத்தை இயக்க உள்ளேன். எஸ் என்கிற பெண்ணும், ஈ என்கிற ஆணும் ஒரு தலைவரை என்ன செய்தார்கள் என்பது பற்றிய கதை இது. தமிழக தேர்தலுக்கு முன் திரைப்படம் வெளியாகும்.” என குறிப்பிட்டுள்ளார்.