சமரசத்துக்கான பேச்சு மேசை தயாராக உள்ளது என பெலாரஸ் அறிவித்துள்ளது.
ரஷ்யாவும் உக்ரேனும், பெலாரஸ்ஸில் சந்தித்து சமாதான பேச்சுகளை நடத்துவதற்கு நேற்று இணக்கம் தெரிவித்திருந்த நிலையிலேயே பெலாரஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இரு தரப்பு (ரஷ்யா-உக்ரேன்) கொடிகளுடன் பேச்சுக்கான மேசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இரு தரப்பு பிரதிநிதிகளும் வந்து இறங்கியதும் பேச்சு ஆரம்பமாகும் என வும் பெலாரஸ் தெரிவித்துள்ளது.
” பேச்சு மூலம் ஒரு தீர்வு கிடைக்குமென நாங்கள் நம்பவில்லை. எனினும் பேச்சுகளில் கலந்து கொள்கிறோம் என உக்ரேன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.