‘சம்பள உரிமையை வெல்ல ஓரணியில் திரள்வோம்’

நாளை 5 ஆம் திகதி நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தப்போராட்டமானது முற்று முழுதாக கம்பனிகளுக்கு அழுத்தத்தை கொடுப்பதற்கும், தொழிலாளர்களின் ஒற்றுமையை வெளிக்காட்டுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டதாகும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜெ . அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகியுள்ள நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி சிந்திக்கும் ஒவ்வொருவரும் இந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களின் நியாயமான இக்கோரிக்கைக்கு எமது தோல்கொடுத்து எமது ஒற்றுமையை வலியுறுத்துவோம் .

நாட்டின் தற்போதைய சுகாதார விதிமுறைகளை கருத்திற்கொண்டு பணிப்பகிஸ்கரிப்பு செய்து வீட்டில் இருந்தவாறே இந்த அடையாள போராட்டத்தை மேற்கொள்ள சகல இளைஞர் யுவதிகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக அழைப்பு விடுக்கின்றோம்.

மேலும் இந்த போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் எமக்கு ஆதரவு தெரிவித்துள்ள நகர வர்த்தகர்கள் , முட்சக்கர வண்டி சங்கங்கள் , ஏனைய போக்குவரத்து சங்கங்கள் , ஏனைய தொழிற்சங்கங்கள் , அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் , பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் மற்றும் ஏனைய சகல துறை சார்ந்த அமைப்புகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணியினரின் சார்பில் நன்றிகள் .” – என்றும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles