சம்பள சமரில் வென்றுவிட்டோம்! அனைவருக்கும் நன்றி!!

சம்பள உயர்வு தொடர்பில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. இந்த சம்பள உயர்வு சமரில் வெற்றிபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்டவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

அடிப்படை நாள் சம்பளம் 35 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு ஆயிரத்து 350 ரூபா கிடைக்கப்பெறும் நிலையில், எஞ்சிய 350 ரூபா கொடுப்பனவையும் கூடியவிரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் எமது தொழிலாளர்களுக்கு 70 சதவீத சம்பள உயர்வு கிடைக்கப்பெறும் எனவும் அவர் கூறினார்.

சம்பள விடயம் தொடர்பில் 10.09.2024 அன்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நல்லாட்சி காலத்தில் எமது தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவைகூட பெற்றுக்கொடுக்க முடியாமல் இருந்த அரசியல் தலைவர்கள், இன்று போலி வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றனர். தேர்தலில் தோல்வி உறுதி என்பதால்தான் பொய் வாக்குறுதிகளை வழங்கியாவது வெற்றி பெறலாம் என முயற்சிக்கின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியையும் நாம் நிறைவேற்றினோம். தற்போது அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபாவையும் பெற்றுக்கொடுத்துள்ளோம். மேலதிக கொடுப்பனவான 350 ரூபாவையும் விரைவில் பெற்றுக்கொடுத்து நாளொன்றுக்கு 1,700 ரூபா கிடைப்பதற்கு வழிவகுக்கப்படும்.

எமது மக்களுக்கு காணி உரிமை வேண்டுமென எமது அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதியிடம் கேட்டார், அதனை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோட்டங்களை கிராமங்களாக்கி தொழிலாளர்களுக்கு உள்ள தடைகளை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம்கூட முன்வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்ற பிறகு எமது அமைச்சர் தலைமையில் எமது தொழிலாளர்களை சிறுதோட்ட பங்குதாரர்களாக மாற்றும் திட்டமும் உள்ளது. அது உரிய வகையில் செயற்படுத்தப்படும். ஏனையோர்போல் பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்படமாட்டாது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலானது நாட்டில் எதிர்காலத்தை மட்டுமல்ல மலையக எதிர்காலத்தையும் நிர்ணயிக்கப்போகும் தேர்தலாகும். எனவே, ஜனாதிபதிக்கு வாக்களித்து நாட்டையும் முன்னேற்றி, நாமும் முன்னேறுவோம்.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles