ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரசிங்கவை நியமிப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த முடிவு சரியானது. அந்த முடிவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க எடுத்த முடிவு தவறானது என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
