இலங்கையின் இசையின் மறக்கமுடியாத அனுபவத்தை பார்வையாளர்களுக்குக்கொண்டுவரும் Dream Music Fest இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசி ஆட்டாபி எல்சி இன் அனுசரணையில் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நெலும் பொகுன மஹிந்த ராஜபக்ச திரையறங்கு வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வானது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கோவிட் – 19 முடக்கமானது தளர்த்தப்பட்ட பின்னர் அனைவரையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாகும்.
இந்நிகழ்வின்மூலம் மிகவும் பிரபலமான இசைக்கலைஞர்கள் மற்றும் இசைக்குழுக்களினால் வழங்கப்படும் கிழக்கு மற்றும் மேற்கத்திய இசையினை பார்வையாளர்கள் அனுபவித்திடமுடியும்.
நிகழ்வானது மேலும் பலதரப்பட்ட வயது வித்தியாசங்களை சார்ந்த உள்ளுர் கலைஞர்கள் மற்றும் பிரபலமான DJS வாத்திய கலைஞர்கள் மற்றும் பாடகர்களை உள்ளடக்கியுள்ளதுடன் பல்வேறுபட்ட இரசனைகளை கொண்ட பார்வையாளர்களைக் கவரும் வகையில் இடம்பெறவுள்ளது.
பங்கேற்கவுள்ள களைஞர்களில் சிறப்பு கலைஞர்களாக சுனில் பெரேரா, பாத்திய மற்றும் சந்தேஷ், ரந்தீர்விடான உமாராசின்ஹவன்ச,கெவின்டி அல்மெய்தா, கசுன்கல்ஹார, ஆத்மாலியானகே, சமிதாமுடுங்கொட்டுவ, சங்கதினேத், சனுகவிக்ரமசிங்க, லஹிருபெரேரா, ரித்மாவீரவர்தன் மற்றும் தனித் ஸ்ரீ ஆகியோரும் பங்கேற்கவுள்ளார்கள்.
இந்நிகழ்வின்போது அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளும் கடுமையாக கடைபிடிக்கப்படும்.
நபர்களுக்கிடையிலானநேரடி தொடர்பை முற்றாக குறைப்பதன் நோக்கமாக, டிக்கெட்டுகளை www.myticket.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக மட்டுமே கொள்வனவு செய்யமுடியும்.
மேலும் பங்கேற்பாளர்களின் நெரிசல்களை குறைக்கும் வகையில் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே நுழைவு வாயில்கள் திறக்கப்படும்.
நிகழ்வு இடம்பெறும் வளாகமானது சானிடையிசர் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்படுவதோடு அனைத்து நுழைவாயில்களிலும் உடல் வெப்பநிலை சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் கைகளை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வினை Event management association, ஊடகபங்காளரான தெரணடிவி உடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதுடன், சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 தொற்று நோயைத் தொடர்ந்து,பொழுது போக்குத்துறை குறிப்பிடத்தக்க நிதிசார்ந்த இழப்புகளை சந்திக்க நேரிட்டுள்ளது. Dream Music Fest இன்முக்கிய நோக்கம்,பொழுதுபோக்குத்துறைக்கு தொழில்துறைக்கு புதிய உயிர் ஊட்டலையும் ஆற்றலையும் கொண்டுவருவதோடு, இலங்கையின் பொழுது போக்குத்துறையின் வருகையை கொண்டாடுவதற்காகவும் அதன் பார்வையாளர்களுக்கு ஒப்பிடமுடியாத இசை அனுபவத்தை அளிக்கும் புதிய தொடக்கத்தினை வழங்குவதுமே ஆகும்.