டீசல் தட்டுப்பாட்டால் இரத்தினக்கல் அகழ்வும் பாதிப்பு!

இரத்தினபுரி மாவட்டத்தில் டீசல் தட்டுப்பாடு காரணமாக இரத்தினக்கல் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். டீசல் தட்டுப்பாடு காரணமாக அகழ்வு பணிகளில் ஈடுபடுவோருக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்த முடியாது உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி-, பெல்மதுளை,- இறக்வான-, குருவிட-, எஹலியகொடை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்று வரும் பாரிய குழிகளில் நீரினை அகற்றுவது மிக அவசியமாகவுள்ளதாக இப்பணிகளில் ஈடுபடுவோர் சுட்டிக் காட்டினர்.

இதற்கு மேலதிகமாக சில பகுதிகளில் இரத்தினக்கல் அகழ்வு மண்ணை நீர் கொண்டு கழுவுவதற்கும் இயந்திரங்கள் மூலம் நீரைப் பெற வேண்டியுள்ளதால் டீசல் தட்டுப்பாட்டினால் முடியாது உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.இந்நிலைமை காரணமாக இரத்தினபுரியில் பல பகுதிகளில் இரத்தினக்கல் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனவே இரத்தினக்கல் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவோரின் நீர் இறைக்கும் இயந்திரங்களுக்காவது டீசலினை பெற்றுத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles