தடல்ல பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்

தடல்ல – பியதிகம பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். 

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில், அவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணை காலி பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles