இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய MV X-Press Pearl கப்பலின் கெப்டன், பிரதான பொறியியலாளர் மற்றும் இரண்டாம் நிலை பொறியியலாளர் ஆகியோர் நாட்டிலிருந்து வெளியேற, கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு துறைமுக அதிகார சபையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
