தொடரும் தோல்வி – ஒரு நாள் தொடரையும் பறிகொடுத்தது இல்லை

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.

தனஞ்ஜய டி சில்வா 91 ஓட்டங்களை பெற்றார். கன்னி சதத்தை பதிவு செய்யும் வாய்ப்பை தவறவிட்டார்.

242 என்ற வெற்றியிலக்கை நோக்கு ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, 43 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கை அடைந்தது , 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவது போட்டி ஜுலை 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles