“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளான்றுக்கு அரசாங்கம் 200 ரூபா வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு இல்லை. அதனை நாம் ஆதரிக்கின்றோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
