நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டுமென வேண்டிக்கொண்டு, அவரது ரசிகர்கள் ரத்தினகிரி முருகன் கோயில் படிகளில் மண்டியிட்டு ஏறி பிரார்த்தனை.
கையில் சிம்பு படத்தை வைத்துக் கொண்டு மனதில் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வைத்துக் கொண்டு மண்டியிட்டு படியேறிச் சென்று முருகனை தரிசித்தனர் சிம்புவின் தீவிர ரசிகர்கள்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் மச்சி மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிம்பு ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.
பிரார்த்தனைக்கு முன்னதாக சாலையோரங்களில் ஆதரவின்றி தவித்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினர் சிம்பு ரசிகர்கள்.