நாட்டில் மேலும் 227 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 227 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று இதுவரையில் 510 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 22 பேர் கடந்த 20 நாட்களுக்குள் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles