நானுஓயாவில் ஆட்டோ விபத்து – மூவர் காயம்!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா- நானுஓயா பிரதான வீதியில் ஆட்டோவொன்றுதடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
 
அவர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
கினிகத்தேனயிலிந்து ராகலைசூரியகாந்தி தோட்டத்திற்கு செல்லும் வழியில் இன்று ( 26 )சனிக்கிழமை காலை 9 மணியளவில் நானுஓயா வெண்டிகோணர் காத்தாடி முடக்கில் முச்சக்கர வண்டி வீதியில் தடம் புரண்டுள்ளது.
 
முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட மேலும் ஆண் ஒருவரும் பெண் ஒருவருமாக இரண்டு பேர் விஜயம் செய்துள்ளனர்.  

Related Articles

Latest Articles